Monday, 29th April 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : 'பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்ட உறுப்பினருக்கு, விருது வழங்குவது போல, சட்டசபையில், சிறப்பாக செயல்படும் உறுப்பினருக்கு, விருது வழங்க வேண்டும்' என, தமிழக சபாநாயகர் தனபால் பரிந்துரை செய்துள்ளார்.
சட்டசபையை சச்சரவு இல்லாமல், சிறப்பாக நடத்தி செல்ல உதவும் குழுவின் தலைவரான, உத்தர பிரதேசம் மாநில சபாநாயகர், நேற்று அனைத்து மாநில சட்டசபை சபாநாயகர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது, தமிழக சட்டசபை சபாநாயகர், தனபால் பேசியதாவது: அனைத்து சட்டசபைகளுக்கும், தனி விதிகள் உள்ளன. சபையை சிறப்பாக நடத்த, உறுப்பினர்கள் தவறு செய்வதை தடுக்க, சபாநாயகருக்கு தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதை, முறையாக பயன்படுத்த வேண்டும்.சபையில் ஒழுங்கை பராமரிப்பது ஒரு கலை. உறுப்பினர்களுக்கு விதிகள் குறித்து, பயிற்சி அளிக்க வேண்டும். இது, அவர்கள் ஒழுங்காக செயல்பட உதவும்.
பார்லிமென்டில் ஒவ்வொரு ஆண்டும், சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களை தேர்வு செய்து, சிறந்த உறுப்பினருக்கான விருது வழங்கப்படுகிறது. அதேபோல, சட்டசபையிலும் வழங்க வேண்டும். இது மற்ற உறுப்பினர்கள், சட்டசபை விதிமுறைகளை பின்பற்ற ஊக்கம் அளிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.